rtjy 72 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை வந்த ஐரோப்பிய தம்பதிக்கு அதிர்ச்சி

Share

இலங்கை வந்த ஐரோப்பிய தம்பதிக்கு அதிர்ச்சி

களுத்துறை வடக்கு பிரதேசத்தில் ரஷ்ய தம்பதி தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் புகுந்து பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

200 அமெரிக்க டொலர், 96,000 ரூபா மற்றும் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட சொத்துக்களை திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆர்தர் கெர்வியூ என்ற ரஷ்யர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை தொடங்கியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர் கிட்டத்தட்ட 20 அடி உயரமுள்ள சுவரில் இருந்து குதித்து 211ஆம் இலக்க அறைக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் ரஷ்ய பெண்ணின் ஆடையை அணிந்து கொண்டு சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...