rtjy 72 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை வந்த ஐரோப்பிய தம்பதிக்கு அதிர்ச்சி

Share

இலங்கை வந்த ஐரோப்பிய தம்பதிக்கு அதிர்ச்சி

களுத்துறை வடக்கு பிரதேசத்தில் ரஷ்ய தம்பதி தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் புகுந்து பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

200 அமெரிக்க டொலர், 96,000 ரூபா மற்றும் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட சொத்துக்களை திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆர்தர் கெர்வியூ என்ற ரஷ்யர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை தொடங்கியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர் கிட்டத்தட்ட 20 அடி உயரமுள்ள சுவரில் இருந்து குதித்து 211ஆம் இலக்க அறைக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் ரஷ்ய பெண்ணின் ஆடையை அணிந்து கொண்டு சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...