ranil
அரசியல்இலங்கைசெய்திகள்

பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம்! – ரணில் அபாய எச்சரிக்கை

Share

இந்த வருடத்துக்குள் இலங்கை பாரிய உணவுத் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுக்க நேரிடலாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்த நிலைமை இலங்கைக்கு மாத்திரமன்றி முழு உலகத்துக்கும் ஏற்படும் என்றும், இதற்கு முகம்கொடுப்பதற்காக உலக உணவுத் திட்டமும் அமெரிக்கா போன்ற நாடுகளும் தயாராகி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஏற்படக் கூடிய நிலைமை தடுப்பதற்காக நாட்டில் பயிர்ச் செய்கைகளை ஊக்கப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட நகர பிரதேசங்களில் ஏற்படக் கூடிய நிலைமையைத் தடுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்களை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
IMG 7681
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொத்மலையில் மாபெரும் சிரமதானப் பணி: 20 கிராமங்களுக்கான போக்குவரத்துப் பாதையைச் சீரமைக்க 2,000 பேர் திரண்டனர்!

டித்வா (Ditwah) புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கொத்மலை, பனங்கம்மன பகுதி மற்றும் மகா பீல்ல கால்வாய்...

MediaFile 2 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அதிவேக வீதியில் அதிரடிச் சோதனை: கடவத்தை நுழைவாயிலில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி மற்றும் கடவத்தை வெளியேறும் நுழைவாயில் பகுதிகளில் இன்று (18)...

image b16dc0e689
செய்திகள்இலங்கை

மின்சார சபை மறுசீரமைப்பு: 2,200 ஊழியர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் – வாழ்க்கைத் தரம் கேள்விக்குறி என முறையீடு!

இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, விருப்ப ஓய்வுக்காக (VRS) விண்ணப்பித்துள்ள...

arast 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

1 கோடி ரூபா மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் கைது!

இணையத்தளம் வாயிலாகத் தளபாடங்கள் (Furniture) வழங்குவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை...