நாட்டில் ஏற்படப்போகும் ஆபத்து: எச்சரிக்கை
இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் போஷாக்கின்மை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
5 வயதிற்கு குறைந்த மூன்று இலட்சம் பிள்ளைகளும், 6 இலட்சம் பெண்களும் மந்த போசனையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் (19.07.2023) இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மந்த போசனையினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் மாகாணமாக மேல் மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் மற்றும் சிறுவர்கள் மந்த போசனையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுவர்கள் மத்தியில் வந்த பூசனை குறைவான மாகாணமாக சபரகமுவ மாகாணமும் பெண்கள் மத்தியில் மந்த பேசனை குறைந்த மாகாணமாக வட மாகாணமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a comment