photodune 2008349 the drowning man m
இலங்கைஅரசியல்செய்திகள்

நீரில் மூழ்கி ஐவர் பலி!!

Share

உமாஓயா கரந்திஎல்ல பகுதியில் நீராடசென்ற நிலையில் ஐந்து பேர் நீரில் மூழ்கி காணாமல் போன சம்பவம் நேற்று இடம்பெற்றது.

இந்த நிலையில், காணாமல் போன நான்கு பேர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவரை தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்க்பட்டது.

இந்த நிலையில், காணாமல் போயிருந்த 22 வயதுடைய யுவதியொருவர் சடலமாக இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஹட்டம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 21, 19, 23 வயதுகளை உடைய மூன்று யுவதிகளும், 23 வயதுடைய இளைஞனொருவரும் நேற்று சடலமாக மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக பதுளை பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஹட்டம்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஹட்டம்பிட்டிய பகுதியில் உள்ள உறவினர் வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்பதற்காக வந்திருந்த சிலரே இந்த அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஹட்டம்பிட்டி பொலிஸார் எமது தமிழ்நாடி செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டனர்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...