sanakian 2
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி பதவி விலகும் வரை போராடுங்கள்! – சாணக்கியன் வலியுறுத்து

Share

“ ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலகும்வரை , அவருக்கு எதிரான போராட்டத்தை மக்கள் கைவிடக்கூடாது. அவரின் வீடு மற்றும் அலுவலகம் முன் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சமீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். ‘கோ ஹோம் கோத்தா’ என இடித்துரைத்து வருகின்றனர். அந்த ‘கோ ஹோம் கோத்தா’ என்ற தனிநபருக்கு எதிரான கோஷத்தை ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மாற்றுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் முயற்சித்துவருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற போராட்டத்துக்கு தமது சகாக்களை ஆளுங்கட்சியினர் இறக்கியிருந்தனர்.

மக்கள் போராட இடமளித்து, பிரச்சினையை இழுத்தடிப்பதும் அல்லது மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தை வன்முறையாக மாற்றுவதற்குமே ஆளுந்தரப்பு முயற்சிக்கின்றது. இதற்கு இடமளித்துவிடக்கூடாது. இந்த அரசுக்கு எதிராக போராடி கிராம மக்கள் களைத்துவிட்டனர். எனவே, தற்போது மேல்மாகாணத்தில் தன்னெழுச்சி போராட்டங்கள் வலுக்க வேண்டும். கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள மக்கள் போராட்டங்களை கைவிடக்கூடாது.

அரசியல் வாதிகள் ஏன் வீதிக்கு வரவில்லை என கேட்கின்றனர், நாங்கள் வந்தால் மக்களின் தன்னெழுச்சி போராட்டம் அரசியல் மயப்படுத்தப்பட்டுவிடும். எனவே, ஒரு நாளில் ஓரிரு மணிநேரம் போராடி தீர்வை அடையமுடியாது. கோத்தாபய ராஜபக்ச பதவி விலகும்வரை அவரின் வீட்டுக்கு முன்னால் அமர்ந்து போராட வேண்டும். 10 பேர் போராட்டத்தை ஆரம்பித்தால் ஒரிரு நாட்களில் அது லட்சமாக மாறும். “ – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
07 8
உலகம்செய்திகள்

ஈரான் போருக்கு பிரிட்டனின் உதவி தேவையில்லை: பிரதமர் கீர் ஸ்டார்மரை விமர்சித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் போரில், பிரிட்டனின் ஆதரவு...

06 7
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கு அவசரக்கால ஆயுத விற்பனை: அமெரிக்க காங்கிரஸ் அனுமதியைத் தவிர்த்த ட்ரம்ப் நிர்வாகம்

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இஸ்ரேலுக்கு சுமார்...

05 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாத்தறை சிறைச்சாலையில் கைதிகள் இடமாற்றம்: பதற்றமான சூழலால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

மாத்தறை சிறைச்சாலையிலிருந்து ஒன்பது கைதிகள் அங்கிருந்த அங்கிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாத்தறை சிறைச்சாலையினுள்...

04 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளங்கன் வைத்தியசாலை துஷ்பிரயோகச் சம்பவம்: இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போராட்டத்திற்கு தடை!

டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் பெண்ணின் உடல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும்...