நான்கு பிள்ளைகளின் தந்தை படுகொலை!

BVZU3f3tIGkKCm1CJWBo 1

தமிழ்க் குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என்று நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, மட்டக்குளியைப் பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நான்கு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் சபாரத்தினம் (வயது 51) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவரின் வீட்டுக்குள் நேற்றிரவு 10 மணியளவில் வாள்களுடன் புகுந்த இனந்தெரியாத நபர்கள் கொலையைப் புரிந்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த குடுமபஸ்தரின் உடலில் 10 இற்கும் மேற்பட்ட வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவரும் நீர்கொழும்பு பொலிஸார், கொலைச் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதாகவில்லை என்று தெரிவித்தனர்.

Exit mobile version