தாக்குதலில் குடும்பஸ்தர் சாவு! – மகன் படுகாயம்

வெட்டிப் படுகொலை

கூரிய ஆயுதத்தால் குடும்பஸ்தர் ஒருவர் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

களனி – வராகொட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் தங்கியிருந்த வீட்டுக்கு நேற்றிரவு சென்ற குழுவொன்று, அவர் மீதும், அவரது மகன் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு, தங்க ஆபரணங்கள் மற்றும் காணி உறுதிப்பத்திரம் என்பனவற்றைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 63 வயதான தந்தை உயிரிழந்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரையில் கைதுசெய்யப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

#SriLankaNews

 

Exit mobile version