செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய சந்தையில் வீழ்ச்சியடைந்த மரக்கறிகளின் விலை!!

istockphoto 503050088 170667a
NUwara Eliya, Sri Lanka - November 26, 2015: Sri Lankan vendor and his customer in his greengrocer shop in Nuwara Eliya Central Market.
Share

நுவரெலியா மத்திய சந்தையில் மரக்கறி வகைகளின் விலை தற்போது வீழ்ச்சி கண்டு வருவதாக நுவரெலியா மத்திய சந்தையில் வியாபாரம் செய்யும் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில், மரக்கறிகளை குறைந்த விலைக்கே விற்பனை செய்கின்றோம் . ஆனால் கொள்வனவு குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் மிஞ்சும் காய்கறிகளை குப்பையில் போடவேண்டியதாக இருக்கிறது என அங்கலாய்ந்துக்கொண்டனர்.

தொடர்ந்து இவ்வாறு குறைவான விலைக்கு விற்பனை செய்வதால் தங்களுக்கு எந்த இலாபமும் இல்லை. இதில் மின்சாரப் பட்டியல் கட்டணத்தைக் கட்டுவதா அல்லது வீட்டுச் சுமையைச் சரி செய்வதா, கடைக் கூலியைக் கட்டுவதா, கடையில் தொழிலுக்கு வருபவர்களுக்கு சம்பளம் வழங்குவதா ? என்ற வினா அனைத்து மரக்கறி வியாபாரிகள் மத்தியிலும் எழுந்துள்ளன.

இன்றைய(24) விலைப்பட்டியலின் படி,

ஒரு கிலோ போஞ்சி 600 ரூபாவிலிருந்து 540 ரூபாவாகவும் கறி மிளகாய் 600 ரூபாவிலிருந்து 500 ரூபாவுக்கும், தக்காளி ஒரு கிலோ 500 ரூபாவிலிருந்து 380 ரூபாவுக்கும், ஒரு கிலோ கரட் 400 ரூபாவிலிருந்து 360 ரூபாவுக்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 360 ரூபாவிலிருந்து 300 ரூபாவுக்கும், லீக்ஸ் ஒரு கிலோ 320 ரூபாவிலிருந்து 300 ரூபாவுக்கும், உள்நாட்டு உருளைக் கிழங்கு ஒரு கிலோ 340 ரூபாவிலிருந்து 300 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மரக்கறிக் கடை உரிமையாளர்கள் கவலைத் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...