A young india
இலங்கைசெய்திகள்

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை நீடிப்பு

Share

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் தற்போதைய வயதெல்லையை அதிகரிக்க தயாரிக்கப்பட்ட சட்டவரைபை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போது அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனை அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் கூட்டத்தில் அமைச்சரவை பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க சட்டவரைபு ஒன்று தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி தயாரிக்கப்பட்ட சட்டவரைபு பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட ஆடைக் கைத்தொழிற்றுறை மற்றும் வர்த்தகத் துறைகளில் தாக்கம் செலுத்தும் விடங்கள் பற்றி ஆராயும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் குழுவில் எட்டப்பட்ட முடிவுகளுக்கு அமைய முன்மொழியப்படும் சட்டம் நடைமுறைக்கு வரும் தினத்தில் 52 வயதை எட்டாத ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 வயதாக நீடிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மூன்று பிரிவுகளின் கீழ் அதிகபட்சம் 59 வயது வரை பணியாற்றுவதற்கு இயலுமான வகையில் ஏற்பாடுகளை உள்ளடக்கி இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயதில் திருத்த சட்டவரைபை நாடாளுமன்றில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...