19 1
இலங்கைசெய்திகள்

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்கான செலவு: மத்திய வங்கி அறிக்கை

Share

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்கான செலவு: மத்திய வங்கி அறிக்கை

2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்கான செலவு 939.5 பில்லியன் ரூபாவாக 1.7% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பான மத்திய வங்கியின் அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் படி, 2022 ஆம் ஆண்டில், அரசு ஊழியர்களின் சம்பளத்திற்காக ரூ. 956.2 பில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2022ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, ​​2023 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களின் சம்பளம் வழங்குவதற்காக செலவிடப்படும் தொகை ரூ. 16.7 பில்லியன் குறைந்துள்ளது.

எவ்வாறாயினும், ஓய்வூதியச் செலவு 2023 ஆம் ஆண்டு, 372.4 பில்லியன் ரூபாவாக 20.5% அதிகரித்துள்ளது.

இதேவேளை, 2022ஆம் ஆண்டில் ஓய்வூதியம் வழங்குவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட செலவினம் 309.1 பில்லியன் ரூபாவாகும்.

ஓய்வூதிய செலவினங்களின் அதிகரிப்புக்கான முக்கிய காரணம், ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டமை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த நிலையில், வளர்ந்து வரும் அரச துறையை வரையறுக்கப்பட்ட நிதி இடத்தின் கீழ் பராமரிப்பது எதிர்காலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

Share
தொடர்புடையது
சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
இலங்கை

முன்னாள் அமைச்சரால் ராஜபக்ச குடும்பத்திற்கு ஏற்பட்ட பரிதாப நிலை .

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்குகள் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், அவற்றை மீண்டும் விசாரிக்குமாறு...

Featuredgughik
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனர் முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகள்.

மலேசியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய பாதாள உலகக் குற்றவாளியான தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலானே சைமா”...

இஷாரா செவ்வந்தி
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டார் இஷாரா செவ்வந்தி!

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ருந்த சந்தேக நபரான இஷாரா...