6 23
இலங்கைசெய்திகள்

நாமலை போட்டியில் இருந்து விலக்குங்கள் : மகிந்தவிடம் கோரிக்கை விடுத்த உயர்மட்ட பிக்கு

Share

நாமலை போட்டியில் இருந்து விலக்குங்கள் : மகிந்தவிடம் கோரிக்கை விடுத்த உயர்மட்ட பிக்கு

ரணிலுக்கு ஆதரவளிக்கும் வகையில் நாமலை போட்டியிலிருந்து விலக்கிக் கொள்ளுமாறு மகிந்தவிடம் உயர்மட்ட பிக்கு ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாரஹேன்பிட்டி அபயராமய விகாரையில் இடம்பெற்ற பௌத்த மாநாட்டின் போதே தொடம்பஹல ராகுல தேரர் ( Rahula Thero ) இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

இந்த நாட்டை வழிநடத்தக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே. எங்கு வேண்டுமானாலும் சொல்வேன் என்று ராகுல தேரர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ரணில் விக்ரமசிங்கவை எதிர்ப்பதும் ஏனைய வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்குவதும் நாட்டின் உண்மையான மதம், பாதுகாப்பு மற்றும் மொழிக்கு எதிரானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில்,சரியான முடிவை எடுப்பதும், தனது மகனின் வேட்புமனுவை தேர்தலில் இருந்து விலக்குவதும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.

நீங்கள் ஒரு உண்மையான தலைவர் மற்றும் தேசபக்தர் என்றால், இந்த இக்கட்டான தருணத்தில் நீங்கள் நாட்டுக்காக இதைச் செய்ய வேண்டும் என்றும் ராகுல தேரர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...