22 12
இலங்கைசெய்திகள்

அத்தியாவசியத் துறைகள் மீதான வற் வரி நீக்கப்படும் : அநுரகுமார அறிவிப்பு

Share

அத்தியாவசியத் துறைகள் மீதான வற் வரி நீக்கப்படும் : அநுரகுமார அறிவிப்பு

உணவு, கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசியத் துறைகள் மீதான வற் வரியை முழுமையாக நீக்குவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க ( Anura Kumara Dissanayaka) உறுதியளித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக அக்குரஸ்ஸவில் நடைபெற்ற பேரணியில் பேசிய திஸாநாயக்க, மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கும் தனது திட்டங்களை விளக்கியுள்ளார்.

அத்துடன் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படவுள்ள 10,000 ரூபாய் முதல் 17,500 ரூபாய் வரையிலான நிதியுதவி குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தை விமர்சித்த அவர், வளங்களைப் பிரிப்பதற்காக அவர்கள் அரசாங்கங்களை உருவாக்குகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்

எனினும் தாம், அத்தகைய நடைமுறைகளை கைவிட்டு அரசியலை ஒரு பொது சேவையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அநுரகுமார தெரிவித்துள்ளார்.

தமது அரசாங்கத்தின் கீழ் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் தடையின்றி வழங்கப்படுமென திஸாநாயக்க உறுதியளித்தார்.

Share
தொடர்புடையது
Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...

ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அங்கு...