22 12
இலங்கைசெய்திகள்

அத்தியாவசியத் துறைகள் மீதான வற் வரி நீக்கப்படும் : அநுரகுமார அறிவிப்பு

Share

அத்தியாவசியத் துறைகள் மீதான வற் வரி நீக்கப்படும் : அநுரகுமார அறிவிப்பு

உணவு, கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசியத் துறைகள் மீதான வற் வரியை முழுமையாக நீக்குவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க ( Anura Kumara Dissanayaka) உறுதியளித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக அக்குரஸ்ஸவில் நடைபெற்ற பேரணியில் பேசிய திஸாநாயக்க, மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கும் தனது திட்டங்களை விளக்கியுள்ளார்.

அத்துடன் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படவுள்ள 10,000 ரூபாய் முதல் 17,500 ரூபாய் வரையிலான நிதியுதவி குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தை விமர்சித்த அவர், வளங்களைப் பிரிப்பதற்காக அவர்கள் அரசாங்கங்களை உருவாக்குகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்

எனினும் தாம், அத்தகைய நடைமுறைகளை கைவிட்டு அரசியலை ஒரு பொது சேவையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அநுரகுமார தெரிவித்துள்ளார்.

தமது அரசாங்கத்தின் கீழ் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் தடையின்றி வழங்கப்படுமென திஸாநாயக்க உறுதியளித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...