tamilni 25 scaled
இலங்கைசெய்திகள்

போராட்டத்தில் குதிக்கும் மின்சார ஊழியர்: அரசிற்கு கடும் எச்சரிக்கை

Share

மின்சார சபை ஊழியர்கள் மூன்று நாள் மாபெரும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக நாளை (03.01.2024) முதல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த தகவலை இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உத்தேச சட்டமூலத்தை உடனடியாக மீளப் பெற்றுக் கொள்ளுமாறு மின்துறை அமைச்சருக்கு அறிவிக்கவுள்ளதாக பிரதம செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சபையை ரணிலுடன் சேர்ந்து விற்க கஞ்சன விஜயசேகர விரும்புகிறார். இதை நாடாளுமன்றத்தில் தன்னிச்சையாக நிறைவேற்றினால் இலங்கை மின்சார சபையில் பாரிய வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும்.

எனவே, இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மூன்று நாட்களுக்கு மாபெரும் போராட்டம் நடத்த ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளோம்.

கஞ்சன விஜயசேகரவுக்கு பகிரங்க சவால் விடுகிறோம் என தெரிவித்துள்ளார். முடிந்தால் இதை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வாருங்கள்.

அன்றைய தினம் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் அனைவரையும் கொழும்புக்கு வரவழைப்போம் வரவழைப்போம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...