நாடாளுமன்றத்தில் இன்று பிரதி சபாநாயகருக்கான தேர்வு நடைபெறவில்லை.
பிரதி சபாநாயகரின் இராஜினாமாகக் கடிதத்தை ஏற்று, அப்பதவிக்கு வெற்றிடம் நிலவுவதாக ஜனாதிபதி இன்னும், நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்தப்படாததாலேயே, தேர்வு இடம்பெறவில்லை.
ஜனாதிபதி, பிரதி சபாநாயகரின் இராஜினாமா கடிதத்தை ஏற்றிருந்தால், இன்றைய சபை நடவடிக்கையில் முதல் விடயமாக அத்தேர்வு இடம்பெற்றிருக்க வேண்டும் .
எனினும், அது நடக்கவில்லை. தற்போது நிதி அமைச்சர் உரையாற்றிக் கொண்டிருக்கின்றார்.
#SriLankaNews