CEB
இலங்கைசெய்திகள்

மின் கட்டணத்துடன் இனி வரியும் அறவீடு!!

Share

ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் மாதாந்த மின் கட்டணத்துடன் 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி சேர்க்கப்படும் என்று இலங்கை மின்சார சபை, இன்று (27) தெரிவித்தது.

சமூக பாதுகாப்பு வரிச் சட்டத்துக்கு அமைய, இலங்கை மின்சார சபையின் மின்சார விநியோகமானது, 2.5% சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கு உட்பட்டது என்று நிதியமைச்சு அறிவித்தமைக்கு அமைய இம்மாதம் 1ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், சபை மேற்படி வரியை அறவிடவுள்ளது.

மின்சார பாவனைக்கு இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்குமாறு நிதியமைச்சுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்ததாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

எனினும், குறித்த சட்டத்தின் பிரகாரம் இலங்கை மின்சார சபையின் மின்சார விநியோகம் இந்த வரிக்கு உட்பட்டது என்று நிதியமைச்சினால் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 1ஆம் திகதி முதல் அமுல்படுதப்பட்ட சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி காரணமாக, பல்வேறு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதுடன், பொருட்களின் விலைகளும் உயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1685686384 NBRO warns of landslide risks in several areas L
செய்திகள்இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கையை தேசிய...

suryakumar salman agha 1200 1760670009
செய்திகள்உலகம்

வான்வழித் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி: முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகல்

வான்வழித் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி: முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகல் பாகிஸ்தான்...

23 652cc44949045
செய்திகள்இலங்கை

இஷாரா செவ்வந்தியை காதலிக்கவில்லை: நாமல் ராஜபக்ச திட்டவட்டம்

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியைத் தான் காதலிக்கவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன...

25 68f24a1996c31
இலங்கைசெய்திகள்

வடக்கு மாகாண இடமாற்றச் சபை விவகாரம்: ஆளுநர் அறிக்கை தொடர்பில் ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

வடக்கு மாகாண ஆளுநரின் ஊடக அறிக்கை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் ஒரு தெளிவுபடுத்தல் அறிக்கையை...