VideoCapture 20220822 081700
இந்தியாஇலங்கைசெய்திகள்

சிறார்கள் உட்பட எட்டு இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

Share

மூன்று சிறார்கள் உட்பட மேலும் எட்டு இலங்கையர்கள் இன்று தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரும், மன்னாரை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.

மன்னாரிலிருந்து படகு மூலம் புறப்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடி பாலம் அருகே வந்திறங்கிய அவர்கள், தாமாகவே ஆட்டோவில் ஏறி மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு சென்றனர்.

இதனையடுத்த மண்டபம் மரைன் பொலிஸார் நடத்திய விசாரணையின்போது, பொருளாதார நெருக்கடி மற்றும் வாழ்க்கைச்சுமை அதிகரிப்பால்தான் இங்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு பின்னர், 8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 149 இலங்கையர்கள் தமிழகம் சென்றுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...