VideoCapture 20220822 081700
இந்தியாஇலங்கைசெய்திகள்

சிறார்கள் உட்பட எட்டு இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

Share

மூன்று சிறார்கள் உட்பட மேலும் எட்டு இலங்கையர்கள் இன்று தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரும், மன்னாரை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.

மன்னாரிலிருந்து படகு மூலம் புறப்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடி பாலம் அருகே வந்திறங்கிய அவர்கள், தாமாகவே ஆட்டோவில் ஏறி மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு சென்றனர்.

இதனையடுத்த மண்டபம் மரைன் பொலிஸார் நடத்திய விசாரணையின்போது, பொருளாதார நெருக்கடி மற்றும் வாழ்க்கைச்சுமை அதிகரிப்பால்தான் இங்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு பின்னர், 8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 149 இலங்கையர்கள் தமிழகம் சென்றுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...