VideoCapture 20220822 081700
இந்தியாஇலங்கைசெய்திகள்

சிறார்கள் உட்பட எட்டு இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

Share

மூன்று சிறார்கள் உட்பட மேலும் எட்டு இலங்கையர்கள் இன்று தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரும், மன்னாரை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.

மன்னாரிலிருந்து படகு மூலம் புறப்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடி பாலம் அருகே வந்திறங்கிய அவர்கள், தாமாகவே ஆட்டோவில் ஏறி மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு சென்றனர்.

இதனையடுத்த மண்டபம் மரைன் பொலிஸார் நடத்திய விசாரணையின்போது, பொருளாதார நெருக்கடி மற்றும் வாழ்க்கைச்சுமை அதிகரிப்பால்தான் இங்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு பின்னர், 8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 149 இலங்கையர்கள் தமிழகம் சென்றுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...