rtjy 224 scaled
இலங்கைசெய்திகள்

கோட்டாபய மகிந்தவுடனான இரகசிய தொடர்புகளை அம்பலப்படுத்திய பிள்ளையான்

Share

கோட்டாபய மகிந்தவுடனான இரகசிய தொடர்புகளை அம்பலப்படுத்திய பிள்ளையான்

ஏன் என்று தெரியாது, மகிந்த ராஜபக்சவின் மீது எனக்கு தனிப்பட்ட ரீதியில் ஒரு ஈர்ப்பு உண்டு என பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நான் சிறையில் இருக்கும் பொழுது மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச உள்ளிட்டோர் என்னைப் பார்க்க வந்தனர்.

அது மாத்திரம் அல்லாமல் பசில் ராஜபக்ச, மனோ கணேசன் உள்ளிட்டோரும் என்னை வந்து சந்தித்தனர். அவர்களோடு அம்பாறையில் இருக்கும் எனது நண்பர் விமலவீர திஸாநாயக்க உள்ளிட்டோர் என்னை வந்து சந்தித்துள்ளனர்.

நான் சிறையில் இருக்கும் போது பல ஆய்வாளர்கள் மற்றும் கட்டுரையாளர்கள் உள்ளிட்டோரும் என்னை வந்து சந்தித்துள்ளனர்.

அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவின் ஆலோசகராக பசில் ராஜபக்ச இருந்தார். அப்போது அவரை எனக்கு உண்மையிலேயே தெரியாது.

இருந்தாலும் ராஜபக்சக்களின் குடும்பத்தில் முதலில் எனக்கு அறிமுகமானவர் கோட்டாபய ராஜபக்சதான். முன்னைய காலத்தில் நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தல் ஒன்றின் போது, எங்களுடைய மதத் தலைவர்களை சந்தித்து எம்மை சந்திக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

அதன் அடிப்படையில் நாங்கள் அவர்களை சந்தித்தோம். அவர்களுடைய அரசாங்கம் வந்தால் கிழக்கு மாகாணத்தில் பாரிய அரசியல் மாற்றங்கள் ஏற்படும் உதவி செய்யுங்கள் என்று கேட்டார். அதேபோன்று 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் மகிந்த அணிக்கு ஆதரவளித்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு உதவினார்கள் என்பது ஒன்றும் இரகசியமான விடயமில்லை என பிள்ளையான் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்திருந்தார்.

ராஜபக்ச நிர்வாகத்திடமும் இறுதிப்போரை வழிநடத்திய இராணுவத்திடமும் நாங்கள் ஆயுதங்களையும் பணத்தையும் பெற்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ள தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 127
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கைக்கு உதவ சீனா என்றும் தயார்: அக்குரானாவில் சீன மொழி மையத்தைத் திறந்து வைத்து தூதர் உறுதி!

இலங்கைக்குத் தேவைப்படும் போதெல்லாம் உதவுவதற்கு சீனா தொடர்ந்து ஆவலுடன் காத்திருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதர் கி...

world 126
செய்திகள்உலகம்

ஈரானிய துறைமுக முற்றுகையை ஆதரிக்கவில்லை: இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு!

ஈரானிய துறைமுகங்களுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துள்ள கடல்வழி முற்றுகை நடவடிக்கையை ஐக்கிய இராச்சியம் ஆதரிக்கவில்லை என்று...

world 125
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார், வவுனியா உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை !

இலங்கையின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பலத்த மின்னல் தாக்கங்கள்...

world 124
செய்திகள்உலகம்

உலகளாவிய வேலைவாய்ப்புச் சவால்: வளரும் நாடுகளுக்கு உலக வங்கித் தலைவர் முக்கிய அறிவுறுத்தல்

வாஷிங்டனில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வசந்தகாலக் கூட்டங்கள் நடைபெறவுள்ள சூழலில், வளரும்...