அகில விராஜ் காரியவசம் 3
இலங்கை

காரியவசம் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்து – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

Share

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசாத்தினால், பொலிஸ் மா அதிபர் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துத் தொடர்பாக மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் நீதிமன்றத்திற்கு விடயங்களை சமர்ப்பித்துள்ளது.

அதன்படி, குறித்த கருத்துத் தொடர்பாக செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி மேலதிக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான கருத்து குறித்து மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தினால் 17661/2026 என்ற வழக்கு எண்ணின் கீழ் இன்றைய தினம், கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் விடயங்கள் ஒப்படைக்கப்பட்டன.

இதன்போது, குறித்த விசாரணைகளுக்காக மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தினால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கு நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில், விசாரணைகளை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, சாகர காரியவசம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி பொலிஸ் மா அதிபர் தொடர்பாக விடுத்த அச்சுறுத்தலான கருத்துத் தொடர்பான தொகுக்கப்படாத காணொளி காட்சிகளைப் பொலிஸாருக்கு வழங்குமாறு 6 ஊடக நிறுவனங்களுக்குக் கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி விடயம், தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் மத்திய குற்றவியல் விசாரணை பணியகம், நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு இணங்க நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Share
தொடர்புடையது
dengue
இலங்கை

தென் மாகாணத்தில் அதிகம் பதிவாகும் டெங்கு நோயாளிகள்.

இந்த ஆண்டில் இதுவரை 88,522 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது....

parlimen president 1
இலங்கை

சிறைச்சாலைகள் மற்றும் கைதிகள் தொடர்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், சிறைச்சாலைகளில் நிலவும் நிலைமை...

Department of Prisons
இலங்கை

மீண்டும் சிறைச்சாலைத் துறை பொறுப்பில் வந்தது பல்லன்சேன சிறைச்சாலை.

பல்லன்சேன சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க...

palansena
இலங்கை

பல்லன்சேன சிறைச்சாலையில் தொடரும் போராட்டம் – அதிகரிக்கப்பட்டது பாதுகாப்பு!

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம்...