Prasanna Ranatunga 44 scaled
இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்! – விரைவில் நீதி வழங்கப்படும் என்கிறார் பிரசன்ன

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் – என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 735 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 196 பேர் சிறையில் உள்ளனர். 19 பேர் தடுப்பு காவலில் உள்ளனர். 81 பேருக்கு எதிராக விசாரணைகள் நிறைவுபெற்று, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 453 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தற்கொலை குண்டுதாரிகளின் சொத்துகளும், தாக்குதலுடன் தொடர்புடையவர்களின் சொத்துகளும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

நிலாந்த ஜயவர்தன எப்படி அரச சாட்சியாளராக மாறினார் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். முன்னாள் சட்டமா திபர் தபுல என்பவரே அவரை அரச சாட்சியாளராக மாற்றினார். அந்த சட்டமா அதிபர் ஓய்வுபெறும் தருவாயில்தான், இந்த தாக்குதல் சூழ்ச்சி என்ற கருத்தை பரப்பினார். அவருக்கு பதவி நீடிப்பு கிடைக்கவில்லை என்பதால் அவ்வாறு செய்திருக்கலாம்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள, பரிந்துரைகளை விரைவில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளேன். தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...