Prasanna Ranatunga 44 scaled
இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்! – விரைவில் நீதி வழங்கப்படும் என்கிறார் பிரசன்ன

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் – என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 735 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 196 பேர் சிறையில் உள்ளனர். 19 பேர் தடுப்பு காவலில் உள்ளனர். 81 பேருக்கு எதிராக விசாரணைகள் நிறைவுபெற்று, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 453 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தற்கொலை குண்டுதாரிகளின் சொத்துகளும், தாக்குதலுடன் தொடர்புடையவர்களின் சொத்துகளும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

நிலாந்த ஜயவர்தன எப்படி அரச சாட்சியாளராக மாறினார் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். முன்னாள் சட்டமா திபர் தபுல என்பவரே அவரை அரச சாட்சியாளராக மாற்றினார். அந்த சட்டமா அதிபர் ஓய்வுபெறும் தருவாயில்தான், இந்த தாக்குதல் சூழ்ச்சி என்ற கருத்தை பரப்பினார். அவருக்கு பதவி நீடிப்பு கிடைக்கவில்லை என்பதால் அவ்வாறு செய்திருக்கலாம்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள, பரிந்துரைகளை விரைவில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளேன். தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....