8 24
இலங்கைசெய்திகள்

பூமிக்கு கிடைக்கப்போகும் சிறிய நிலவு!

Share

பூமிக்கு கிடைக்கப்போகும் சிறிய நிலவு!

இந்த வருடத்தில் தற்காலிகமாக மற்றொரு நிலவு பூமிக்கு கிடைக்கப்போகிறது என்று விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Asteroid 2024 PT5 என்று பெயரிடப்பட்ட சிறு கோள், கடந்த ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சிறுகோளானது 2024 செப்டம்பர் 29 முதல் 2024 நவம்பர் 25 வரை பூமிக்குச் சிறு நிலவாக (mini-moon) செயற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Asteroid 2024 PT5, 10 மீற்றர்கள் [33 அடி] உள்ள சிறு கோள் என அளவிடப்பட்டுள்ளது.

இந்த சிறுகோள் குறுகிய காலகட்டத்திற்கு மட்டும் பூமியின் புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு பூமியைச் சுற்றும்.

ஆனால் ஒரு முறை முழு சுற்றை நிறைவு செய்யும் முன்னரே (அதாவது நவம்பர் 25க்கு பின்னர்) பூமியின் புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபட்டுச் சூரியனைச் சுற்றத் தொடங்கும் எனவும் கூறப்படுகின்றது.

மிகவும் சிறிய அளவில் உள்ளதால் பூமியைச் சுற்றும் காலகட்டத்தில் இதை வெறும் கண்களால் பார்ப்பது சிரமம் என அமெரிக்க ஆஸ்ட்ரோனாமிகள் சமூக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு NX1 என்ற சிறு நிலவு பூமியைச் சுற்றியது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...

Suresh Sally 16
இலங்கை

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

  சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...