இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் பாவனை! – 47 பொலிஸ் குழுக்கள் கடமையில்

police edited
Share

மத்திய மாகாணத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த, 47 பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மத்திய மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் மஹிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (22) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில், மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன தலைமையில், இந்த விசேட குழுக்கள் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாதத்தில் 129 ஹெரோயின் வழக்குகள், 31 ஐஸ் தொடர்பான வழக்குகள், 199 கஞ்சா வழக்குகள் மற்றும் 234 வெவ்வேறு போதைப்பொருள் வழக்குகள் குறித்த பிரிவுகளுக்குள் நடத்தப்பட்டுள்ளதாகவும்இந்த நடவடிக்கைகள் அடுத்த மூன்று மாதங்களுக்கு தொடரும் என்றும் அவர் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 8
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு பயணிக்கவேண்டாம்; அமெரிக்கா உட்பட நாடுகள் விடுத்துள்ள பயண எச்சரிக்கை

இந்தியா நிகழ்த்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பயணிப்பதற்கெதிராக அமெரிக்கா உட்பட பல நாடுகள்...

12 8
இலங்கைசெய்திகள்

தலைக்கவசம் அணிந்து நடமாடுவோருக்கு எச்சரிக்கை !

உந்துருளிகளில் பயணிக்கும் போது, முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிந்திருப்பவர்களுக்கு இலங்கை பொலிஸ் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை...

14 8
இலங்கைசெய்திகள்

சஜித் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் ரணில் கட்சி

எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டு நிர்வாகங்களை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார் என்று...

13 8
இலங்கைசெய்திகள்

முன்னிலை சோசலிசக் கட்சியின் முதலாவது மக்கள் பிரதிநிதி கேகாலையில் தெரிவு

முன்னிலை சோசலிசக் கட்சிக்கான முதலாவது மக்கள் பிரதிநிதி கேகாலையில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜே.வி.பி.யின் முன்னாள்...