koro
இலங்கைசெய்திகள்

மண்ணெண்ணெய் விலை உயர்வு தொடர்பில் சந்தேகம்!

Share

மண்ணெண்ணெய் விலையை உயர்த்தி, சிறு மீனவர்களை வேலையிழக்கச் செய்து, கடல் வளத்தை பெரும் செல்வந்தர்களுக்கு கிடைக்கச் செய்யும் திட்டம் உள்ளதா என்ற சந்தேகத்தை, தென்னிலங்கையின் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் ஒருவர் எழுப்பியுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி நள்ளிரவு முதல் பெற்றோலிய கூட்டுத்தாபனம் மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியது. இதற்கமைய ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை 253 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதுடன், அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.

“அண்மையில், இந்த நாட்டில் சிறு மீன்பிடித் தொழிலை நசுக்குவதற்கான முன்மொழிவுகளை அரசாங்கம் மீன்பிடிக் கொள்கையாகக் கொண்டு வந்தது. அதாவது புதிய படகுகள் உற்பத்திக்குத் தடை விதிக்கப்பட்டது. 55 அடிக்கு மேல் நீளமுடைய படகுகளை மாத்திரமே உற்பத்தி செய்ய முடியும் எனக் கூறினார்கள். அதற்கு ஐம்பது வீதம் நிவாரணமும் வழங்கப்பட்டது.”

இலங்கை வரலாற்றில் வரலாறு காணாத வகையில் மண்ணெண்ணெய் விலை உயர்வடைந்துள்ளமையால் அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்ற பாரிய கேள்வி எழுந்துள்ளதாக அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் அருண ரொஷாந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் குறிப்பிட்டுள்ளார். மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பின் மூலம் இந்த யோசனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளொன்றுக்கு சுமார் 40 லீற்றர் மண்ணெண்ணெய் பயன்படுத்தும் சிறிய மீன்பிடி தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் மற்றும் எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு 15,000 ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவழிக்க வேண்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

“அதுமாத்திரமல்ல, எண்ணெய் கொள்வனவு செய்ய வேண்டும். முன்னர் எண்ணெய் விலை 650 ரூபாய். இன்று 3,000 ரூபாய்.”

தற்போதுள்ள நிலைமைக்கு உடனடி தீர்வைக் கோரி மீனவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சிலாபத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், ஆனால் எந்தவொரு பொறுப்பான அதிகாரியும் அங்கு வரவில்லை எனவும் அருண ரொஷாந்த குற்றம் சுமத்தியுள்ளார்.

சிறுதொழிலாளர்கள் தொழிலில் ஈடுபடும் வாய்ப்பை முடக்கியதன் ஊடாக இயற்கையாகவே பணக்காரர்களின் கைகளுக்கு கடல் வளம் செல்லும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ள மீனவ சங்கத் தலைவர், எரிபொருள் விலையேற்றம் காரணமாக இனி மீன்பிடியில் ஈடுபடப்போவது இல்லையென தொழிலாளர்கள் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக மூன்றரை மாதங்களுக்கும் மேலாக சிறிய மீன்பிடி தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாகவும் அக்காலப்பகுதியில் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட நான்கு பேச்சுவார்த்தைகள் தீர்மானம் எதுவும் எட்டப்படாமல் நிறைடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 693ec68638296
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வவுனியாவில் 7739.5 ஏக்கர் நெற்செய்கை அழிவு: விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

வவுனியா மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள அனர்த்தம் காரணமாக, சுமார் 7739.5 ஏக்கர்...

13d5f9ce af20 4696 bf0a 60e56c536e64 1170x666 1
அரசியல்இலங்கைசெய்திகள்

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்: கோட்டாபய யாழ்ப்பாணம் வராததற்கான அச்சுறுத்தலைச் சத்தியக் கடதாசியில் சமர்ப்பிக்க உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் 2011ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவர்...

MediaFile 1 5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பில் 270 டெங்கு நோயாளர்கள்: தேசிய ஒழிப்பு வாரத்தில் சோதனை நடவடிக்கை!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த ஆண்டில் சுமார் 270க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்...

articles2FBKUgBmfeEql9AyVpMBVO
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள்: கடற்படை பயிற்சி நிறைவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தல்!

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நேற்று (டிசம்பர் 13) பிற்பகல் நடைபெற்ற பயிற்சி நிறைவு...