உலகின் மிக ஆபத்தான பறவையினம் இலங்கைக்கு
இலங்கைசெய்திகள்

உலகின் மிக ஆபத்தான பறவையினம் இலங்கைக்கு

Share

உலகின் மிக ஆபத்தான பறவையினம் இலங்கைக்கு

உலகின் மிகவும் ஆபத்தான பறவையினத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள இரட்டை வாட்டில் காசோவரி (Double Wattled Cassowary) பறவைகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தாய்லாந்தில் இருந்து மூன்று பறவைகள் பெறப்பட்டுள்ளன.

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து MH179 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த பறவைகள் கொண்டுவரப்பட்டன.

காசோவரி பறவை சுமார் ஐந்து அடி உயரம் வரை வளரும் மற்றும் சுமார் 60 கிலோ எடை கொண்டது, இது பெரும்பாலும் “உலகின் மிகவும் ஆபத்தான பறவை” என்று பெயரிடப்பட்டுள்ளது.

தெஹிவளையில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவிற்கு பறவைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு ஆண் பறவைகளும் ஒரு பெண் பறவையுமே இவ்வாறு பெறப்பட்டுள்ளன.

விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் குரங்குகள், காட்டுப் பறவைகள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகளையும் இலங்கை ஏற்றுமதி செய்ய உள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...