298534556 6313943521966524 3112426230294896555 n
அரசியல்இலங்கைசெய்திகள்

வெளியே வர வேண்டாம்! – கோட்டாவுக்கு தாய்லாந்து பணிப்பு

Share

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாங்கொக்கில் தங்கியுள்ள ஹோட்டலை விட்டு வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் பணிப்புரை விடுத்துள்ளனர்

இதேவேளை, அவரது பாதுகாப்பிற்காக சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் அங்கு விசேட கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பேங்காக் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகுமாறுகோரி மிகப்பெரும் போராட்டம் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி நடைபெற்றது.

குறித்த போராட்டம் இடம்பெற்ற நிலையில், தலைமறைவாகியிருந்த கோட்டாபய ராஜபக்ச, நாட்டிலிருந்து தப்பித்து மாலைதீவு சென்றார்.

அங்கு தங்கியிருந்த அவர், ஒரு சில தினங்களில் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் அவருக்கு சாதாரண விசாவே வழங்கியிருந்த நிலையில், இங்கிருந்து தற்போது தாய்லாந்து சென்றடைந்துள்ளார்.

தாய்லாந்து அரசும் அவருக்கு தற்காலிக விசாவே வழங்கியுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தனி விமானம் மூலம் தாய்லாந்து சென்றடைந்துள்ளார் கோட்டாபய ராஜபக்ச.

முதலில் புகெட் நகரில் உள்ள விமான நிலையத்தில் கோட்டாபய வந்திறங்க முடிவு செய்திருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்கள் நிமித்தம் அவர் பாங்காக் ராணுவ விமான தளத்தில் தரையிறங்கியுள்ளார்.

இங்கிருந்து பெயர் வெளியிடப்படாத தனியார் ஹோட்டலுக்கு கோட்டாபய ராஜபக்ச அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில், தாய்லாந்து சிறப்பு பிரிவு பொலிஸார் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டுள்ளனர் எனவும், அவரது பாதுகாப்பு கருதி அவரை வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது எனவும் குறித்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1732463885 students in flood 6
செய்திகள்இலங்கை

சீரற்ற காலநிலை பாதிப்பு: 18 மாவட்டங்கள் பாதிப்பு; மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக, 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது....

MediaFile 7
இலங்கைசெய்திகள்

புழல் சிறையில் உள்ள இலங்கையருக்கு அடிப்படை மருத்துவ உதவி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை விசாரணைக் கைதிகளுக்குத் தேவையான அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க...

image 5b342b3cea
செய்திகள்இலங்கை

வங்கக்கடல் வானிலை காரணமாக நாகப்பட்டினம்-இலங்கை கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து

வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாகப்பட்டினம் – இலங்கை (காங்கேசன்துறை) இடையேயான பயணிகள் கப்பல்...

srilankan airline 300x157 1
செய்திகள்இலங்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்களைத் தாக்கிய சவுதி பிரஜை கைது

சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில்...