vinoo
அரசியல்இலங்கைசெய்திகள்

பயங்கரவாதிகளாக சித்தரித்து மாணவர்கள் பாதையை மாற்றாதீர்!!

Share

அஹிம்சை வழியில்   போராடும் மாணவர்களைப் பயங்கரவாதிகளாக இந்த அரசாங்கம்   சித்திரிக்குமாக இருந்தால், அவர்களின் பாதை மாறக்கூடிய சூழல் ஏற்பட்டு விடுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. வினோநோகராதலிங்கம்  எச்சரித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான முதல்நாள் விவாதத்தில் உறையாற்றும்போதே இவ்வாறு எச்சரித்த அவர் மேலும் கூறுகையில்,

ஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயகம் மரணிக்காது உயர்த்துடிப்புடனும் இயங்கிக் கொண்டிருக்கும் குறிகாட்டியே தேர்தல். அதாவது மக்களுக்கான வாக்குரிமை. மக்களது விருப்புக்கு மாறாக அரசியலமைப்புக்கு முரணாக நமது நாட்டில் நடைபெற வேண்டிய தேர்தல்கள் அனைத்தும் அரசாங்கம் தோல்வியடைந்து விடுவோமா என்ற காரணத்துக்காக   ஒத்திவைக்கப்படுகின்றன இதுவே எமது நாட்டின் ஜனநாயன பெருமை.

பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் மீது  அரச படையினர் , குண்டர் படையினர் திட்டமிட்ட வகையில் தாக்குதல் நடத்தினார்கள். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிராகவும் பொருட்களின் விலையேற்றத்துக்கு எதிராகவும் மாணவர்கள் இன்று போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவர்களை அரசு  பயங்கரவாதிகள் என சொல்லுகின்றது. அரசியல் கட்சிகளின் பயங்கரவாதிகள் என கூறுகின்றார்கள். அஹிம்சை வழியில்  பேராடுபவர்களை நீங்கள் பயங்கரவாதிகள் என கூறினால் அவர்களின் பாதை மாறக்கூடிய சூழல் ஏற்பட்டு விடும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...