3 2
இலங்கைசெய்திகள்

அநுரகுமார திஸாநாயக்கவை கௌரவ பெயர்களினால் விளிக்க வேண்டாமென கோரிக்கை

Share

அநுரகுமார திஸாநாயக்கவை கௌரவ பெயர்களினால் விளிக்க வேண்டாமென கோரிக்கை

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை மேன்மைதாங்கி, அதி மேதகு என விளிக்க வேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினர் கே.டி. லால்காந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அநுராகுமார ஜனாதிபதியாக பதவி வகித்தாலும் அவரை தோழர் என அழைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

தேசிய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தற்பொழுது இந்த நாட்டின் ஜனாதிபதியாக கடமையாற்றி வரும் அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி அநுரகுமார என விளிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

எங்களது ஜனாதிபதி, அதி மேதகு, மேன்மைதாங்கிய உள்ளிட்ட கௌரவ பெயர்களினால் விளிக்க வேண்டிய அவசியமில்லை என லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...