சிங்களக் கடற்படையினரின் தொடர் அத்துமீறலை அனுமதிக்காதீர்! -ராமதாஸ் கண்டனம்

500x300 1724009 ramadoss

தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் தொடர் அத்துமீறலை மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் இலங்கையின் வடக்கு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த கைதுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தனது அறிக்கையில்,

வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 5 பேரை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்துள்ளனர். அவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி காங்கேசன் துறைமுக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது கண்டிக்கத்தக்கது. காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பே அடுத்த கைது படலமும், அத்துமீறலும் நடந்திருக்கிறது.

தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் தொடர் அத்துமீறலை மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது. மீனவர்களை கைது செய்ததற்காக இலங்கை அரசுக்கு மத்திய அரசுகண்டனம் தெரிவிக்க வேண்டும். இனி கைது கூடாது என்று இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும் – என்று தெரிவித்துள்ளார்.

#IndiaNews

Exit mobile version