china sl
செய்திகள்அரசியல்இலங்கை

நன்கொடையாக அரிசியா?? – இல்லவே இல்லை என்கிறது சீனா – ஆம் என்கிறது இலங்கை

Share

இலங்கைக்கு நன்கொடையாக ஒரு மில்லியன் மெற்றிக்தொன் அரிசி சீனாவால் வழங்கப்படவுள்ளது எனும் தகவலை சீனா மறுத்துள்ளது.

ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு சீன இராஜதந்திரி ஒருவர் கருத்து தெரிவித்த நிலையில், அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரிசியை நன்கொடையாக வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டது உண்மையே. இருப்பினும் அந்த கோரிக்கையை சீனா மறுத்துள்ளது – என்றார்.

இதேவேளை, இது தொடர்பில்அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவிக்கையில்,

இலங்கை – சீனா இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அரிசி நன்கொடையாக பெறப்படவுள்ளது – என்றார்.

இந்த நிலையில், குறித்த ஆங்கில பத்திரிக்கைக்கு, வர்த்தக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், இந்த வேண்டுகோளை ஏற்றுள்ள சீன அரசு இதற்கு இணங்கியுள்ளது. இந்த விடயத்தில் எந்த மாற்றமும் கிடையாது என்றுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...