BY
இலங்கைஅரசியல்செய்திகள்

டொலர் தட்டுப்பாடு! – தேங்கும் கொள்கலன்கள்

Share

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக சுமார் 100 சீனிக் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன என இறக்குமதியாளர்களால் தெரிவிக்கப்படுகிறது.

சந்தையில் தற்போது சீனிக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக, சீனி ஒரு கிலோ, 155 ரூபா முதல், 160 ரூபா வரை, விற்கப்படுகின்றது.

துறைமுகத்தில், சீனிக் கொள்கலன்கள் மாத்திரமன்றி ஆயிரக்கணக்கான மெற்றிக்தொன் அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கிய சுமார் 500 கொள்கலன்களும் தற்போது தேங்கிய நிலையில் உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன.

சீனிக் கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதால் இறக்குமதியாளர்களிடம் சீனி இருப்பு இல்லை. ஆனால் சீனியை பதுக்கி வைத்திருந்தவர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

வழமை போன்று வங்கிகள் டொலர்களை வழங்கியிருந்தால் கொள்கலன்கள் தேக்கியிருக்க சாத்தியம் ஏற்பட்டிருக்காது.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு, இறக்குமதியாளர்கள் அனைவருக்கும் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...