BY
இலங்கைஅரசியல்செய்திகள்

டொலர் தட்டுப்பாடு! – தேங்கும் கொள்கலன்கள்

Share

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக சுமார் 100 சீனிக் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன என இறக்குமதியாளர்களால் தெரிவிக்கப்படுகிறது.

சந்தையில் தற்போது சீனிக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக, சீனி ஒரு கிலோ, 155 ரூபா முதல், 160 ரூபா வரை, விற்கப்படுகின்றது.

துறைமுகத்தில், சீனிக் கொள்கலன்கள் மாத்திரமன்றி ஆயிரக்கணக்கான மெற்றிக்தொன் அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கிய சுமார் 500 கொள்கலன்களும் தற்போது தேங்கிய நிலையில் உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன.

சீனிக் கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதால் இறக்குமதியாளர்களிடம் சீனி இருப்பு இல்லை. ஆனால் சீனியை பதுக்கி வைத்திருந்தவர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

வழமை போன்று வங்கிகள் டொலர்களை வழங்கியிருந்தால் கொள்கலன்கள் தேக்கியிருக்க சாத்தியம் ஏற்பட்டிருக்காது.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு, இறக்குமதியாளர்கள் அனைவருக்கும் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...