டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு!
இலங்கைசெய்திகள்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு!

Share

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு!

ஜூலை 28ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில், டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், ஏனைய வெளிநாட்டு நாணய அலகுகளுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

ஏனைய வெளிநாட்டு நாணய அலகுகளுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

எனினும், இது கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது குறைவான பெறுமதியாகவே உள்ளது.

கடந்த வாரத்தில் ஜப்பானிய யெனுக்கு எதிராக ரூபா 15.9 சதவீதமும், ஸ்ரேலிங் பவுண்டிற்கு எதிராக 3.8 சதவீதமும் அதிகமதிப்பு கண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வாரம் பொருளாதாரத்தின் நடத்தை குறித்த மத்திய வங்கியின் அறிவிப்பின்படி, இந்திய ரூபாய்க்கு எதிராக ரூபாய் 9.4 சதவீதமும், யூரோ நாணய அலகுக்கு எதிராக 7 சதவீதமும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை ரூபாவின் நிலை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் கூறுகையில், இலங்கை ரூபாவின் மதிப்பு மீள அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும்.

வழங்கல் மற்றும் தேவைக்கு ஏற்ப டொலரின் பெறுமதியை தீர்மானிக்க அரசாங்கம் அனுமதித்துள்ளது. சமீபகாலமாக ரூபாவின் மதிப்பில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கத்திற்கு முற்றிலும் டொலர் பரிவர்த்தனையே காரணம்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தவுடன், ரூபாவின் மதிப்பு மீள அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...