ponseka 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

இளைஞர்களை ஒடுக்கும் முயற்சிக்கு துணைபோகாதீர்! – பாதுகாப்பு தரப்பினருக்கு பொன்சேகா அறிவுறுத்து

Share

நாட்டுக்காகவும், ஜனநாயக மறுசீரமைப்புக்காகவும் போராடும் இளைஞர்களை ஒடுக்கும் முயற்சிக்கு பாதுகாப்பு தரப்பினர் துணைபோகக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கையை விடுத்தார்.

” பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸார், இராணுவத்தினர் உட்பட பாதுகாப்பு தரப்பினர், அநீதியான முறையில் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்யாவிட்டால் பதவி பறிபோகும் என அஞ்சவும் கூடாது.” எனவும் ஆலோசனை வழங்கினார்.

பாதுகாப்பு தரப்பினர் நேர்மையாக செயற்படுவதால் அவர்களின் பதவிகள் பறிக்கப்படுமானால், எமது ஆட்சியில் நிச்சயம் அவர்களுக்கு மீள பதவிகள் வழங்கப்படும். அவர்களுக்காக நாம் துணை நிற்போம்.” எனவும் பொன்சேகா உறுதியளித்தார்.

அதேவேளை, மொட்டு கட்சி உறுப்பினர்களுடன் அமையும் இடைக்கால அரசு தீர்வாக அமையாது எனவும் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...