நாடாளுமன்றத்தில் அரசு பெரும்பான்மையை இழக்கவில்லை என்று சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் கூறியவை வருமாறு,
” நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் அரசு வசம் உள்ளது. எனவே, ஆட்சி தொடர்பில் சிக்கல் எழவில்லை. அவ்வாறு அரசுக்கு பெரும்பான்மை இல்லையெனில், அது நிரூபிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு நிரூபித்தால் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்லாம். இல்லையேல் பெரும்பான்மையை நிரூபித்து எந்த கட்சியும் புதிய ஆட்சியை கோரலாம்.
அரசமைப்பில் உள்ள வழிகள் இவைதான். அதனை செய்வதற்கு நாம் தயார்.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment