289269775 701318298032701 2324256008516894281 n
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் எரிபொருள் விநியோகத்துக்காக பங்கீட்டு அட்டை அறிமுகம்!

Share

யாழ். மாவட்ட எரிபொருள் விநியோகத்துக்காக எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் பங்கீட்டு அட்டை முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மக்கள் தமக்கான பதிவுகளை பிரதேச செயலகங்களில் மேற்கொண்டு எரிபொருள் அட்டையை பெற முடியும்.

அரச பணியாளர்கள் தமது திணைக்கள தலைவர் ஊடாக மாத்திரமே தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

அத்துடன் அத்தியாவசிய சேவைக்காக ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள ஒரு ப.நோ.கூ.ச (MPCS) நிரப்பு நிலையம் செயற்படும்.

இன்று (20.06.2022) இடம்பெற்ற யாழ் மக்களுக்கான எரிபொருள் விநியோகம், அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பான விசேட கலந்துரையாடலில் இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) முரளிதரன், பிரதேச செயலாளர்கள், பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

288896494 701318261366038 5458907251135152998 n 289269775 701318298032701 2324256008516894281 n

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...