2 5
இலங்கைசெய்திகள்

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் லசித் மாலிங்க விடுத்துள்ள கோரிக்கை…!

Share

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மாலிங்க(Lasith Malinga) சகல கிரிக்கெட் இரசிகர்களிடமும் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதன்படி, அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பார்வையிடுவதற்கு சகல கிரிக்கெட் இரசிகர்களும் செல்ல வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் திமுத் கருணாரத்ன(Dimuth Karunaratne) தீர்மானித்துள்ள நிலையில், மேற்படி கோரிக்கையை முன்னாள் வீரர் லசித் மாலிங்க விடுத்துள்ளார்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில் நாளை(06) காலை 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டி திமுத் கருணாரத்னவின் 100ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகும்.

இந்தநிலையில், நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் திமுத் கருணாரத்ன சதத்தைப் பெறுவார் என தாம் எதிர்பார்ப்பதாக லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...