நாட்டின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆக்கிரமிக்கப்போகும் இலக்கம்
இலங்கைசெய்திகள்

நாட்டின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆக்கிரமிக்கப்போகும் இலக்கம்

Share

நாட்டின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆக்கிரமிக்கப்போகும் இலக்கம்

இலங்கையில் உத்தேச டிஜிட்டல் அடையாள அட்டையின் ஊடாக மக்களுக்கு இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், உத்தேச டிஜிட்டல் அடையாள அட்டையின் ஊடாக எதிர்காலத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் குறிப்பிட்ட இலக்கம் அறிமுகப்படுத்தப்படும்.

ஒவ்வொரு குடிமகனையும் உரிய இலக்கத்தின் மூலம் அடையாளம் காணும் முறைமையொன்றை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று இந்தியாவில் வீதியோரம் சென்று ஒரு கப் தேநீரை கடையில் வாங்கினாலும், இந்தியர்கள் ஆதார் எனப்படும் க்யூஆர் குறியீடு மூலம் 5 அல்லது 10 ரூபா பணத்தை கூட செலுத்துகிறார்கள்.

அந்த முறை சிறிது காலம் கழித்து இலங்கைக்கு வரும். அதன் அடிப்படை அடித்தளத்தை நிறுவுவதற்கு சுமார் ஒரு வருடம் ஆகும். அனைவருக்கும் அடையாள எண் கிடைக்கும்.

அது தேசிய அடையாள அட்டை எண் அல்ல. அந்த எண்ணின் மூலம்தான் எல்லாமே நடக்கும். மருத்துவமனைக்கு சென்றாலும், அரச அலுவலகத்துக்கு சென்றாலும் அனைத்தும் அந்த எண் மூலம்தான் நடக்கும். அதற்கான நடவடிக்கை எடுக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...