courts
அரசியல்இலங்கைசெய்திகள்

தொலைபேசிகளை வழங்கும் வரை போராட்டக்காரர்களுக்கு தடுப்பு!

Share

பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க மற்றும் சமூக ஆர்வலர் டான் பிரியசாத் ஆகியோரின் கையடக்கத் தொலைபேசிகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தமது அலைபேசிகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்கும் வரை இவர்களை தடுத்து வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அலரிமாளிகை மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கமவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சந்தேக நபர்களை எச்சரித்த நீதவான், நீதிமன்ற உத்தரவை மீறினால் பிணை ரத்து செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...