image 380036c59b
இலங்கைசெய்திகள்

சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதி மறுப்பு???

Share

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹண பண்டார ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், சிறைச்சாலை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்படுகின்றமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து அவர்கள் சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிறைச்சாலை சென்று கைதிகளை பார்வையிட்ட மனோ கணேசன் கருத்துத் தெரிவிக்கையில்,

அநுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர், லோஹான் ரத்வத்த தன் முன்னால் துப்பாக்கி நீட்டி மிரட்டினார் என தெரிவித்துள்ளார். சற்று பிசகினாலும் அது வெடித்திருக்கும். அது வெடித்திருந்தால் நாங்கள் அனைவரும் புலிச் சந்தேகநபர்கள் என்பதால் அவரை கொலை செய்ய முயன்றோம் என தெரிவித்திருப்பார்கள்.

பதிலுக்கு அவர் சுட்டதால் கலவரம் ஏற்பட்டது என கதை கட்டி திரிபுபடுத்தி கூறியிருப்பார்கள் என கைதிகள் எங்களிடம் தெரிவித்துள்ளனர்,

இராஜாங்க அமைச்சர் மதுபோதையில் துப்பாக்கியுடன் சிறைச்சாலைக்கு சென்று சிறைக் கைதிகளை அச்சுறுத்தியுள்ளமைஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது – என்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி மண்டியிட வைத்த சம்பவம் நாட்டில் அனைத்து தரப்பினர்களிடையேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் குறித்த கைதிகளை பார்வையிடுவதற்காக மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹண பண்டார ஆகியோர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
20061616 baby
இலங்கைசெய்திகள்

21 வருட காத்திருப்புக்குப் பின் 3 குழந்தைகளைப் பிரசவித்த தாய் யாழில் உயிரிழப்பு! – குடும்பத்தினர் சோகம்

யாழ்ப்பாணம், கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த யோகராசா மயூரதி (வயது 45) என்ற குடும்பப் பெண், 21...

images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...