இலங்கைசெய்திகள்

சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதி மறுப்பு???

Share
image 380036c59b
Share

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹண பண்டார ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், சிறைச்சாலை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்படுகின்றமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து அவர்கள் சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிறைச்சாலை சென்று கைதிகளை பார்வையிட்ட மனோ கணேசன் கருத்துத் தெரிவிக்கையில்,

அநுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர், லோஹான் ரத்வத்த தன் முன்னால் துப்பாக்கி நீட்டி மிரட்டினார் என தெரிவித்துள்ளார். சற்று பிசகினாலும் அது வெடித்திருக்கும். அது வெடித்திருந்தால் நாங்கள் அனைவரும் புலிச் சந்தேகநபர்கள் என்பதால் அவரை கொலை செய்ய முயன்றோம் என தெரிவித்திருப்பார்கள்.

பதிலுக்கு அவர் சுட்டதால் கலவரம் ஏற்பட்டது என கதை கட்டி திரிபுபடுத்தி கூறியிருப்பார்கள் என கைதிகள் எங்களிடம் தெரிவித்துள்ளனர்,

இராஜாங்க அமைச்சர் மதுபோதையில் துப்பாக்கியுடன் சிறைச்சாலைக்கு சென்று சிறைக் கைதிகளை அச்சுறுத்தியுள்ளமைஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது – என்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி மண்டியிட வைத்த சம்பவம் நாட்டில் அனைத்து தரப்பினர்களிடையேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் குறித்த கைதிகளை பார்வையிடுவதற்காக மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹண பண்டார ஆகியோர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
20 7
உலகம்செய்திகள்

காசா மக்களுக்கு விழப்போகும் பேரிடி : காசாவின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றும் இஸ்ரேல்

காசா (Gaza) பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, காலவரையின்றி அங்கு தங்கள் இருப்பை நிறுவும் திட்டத்தை இஸ்ரேலின்...

14 6
இலங்கைசெய்திகள்

தபால் வாக்குகள் தனியாக எண்ணப்பட மாட்டாது:வெளியான அறிவிப்பு

இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது தபால் வாக்குகள் தனியாக எண்ணப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

13 6
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு

வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார்...

15 6
இலங்கைசெய்திகள்

வெலிக்கடை சிறைக்குள் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு

வெலிக்கடைச் சிறைச்சாலையின் கழிவுநீர் வடிகாண் ஒன்றின் அருகே இருந்து கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையின் எல்...