image 380036c59b
இலங்கைசெய்திகள்

சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதி மறுப்பு???

Share

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹண பண்டார ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், சிறைச்சாலை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்படுகின்றமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து அவர்கள் சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிறைச்சாலை சென்று கைதிகளை பார்வையிட்ட மனோ கணேசன் கருத்துத் தெரிவிக்கையில்,

அநுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர், லோஹான் ரத்வத்த தன் முன்னால் துப்பாக்கி நீட்டி மிரட்டினார் என தெரிவித்துள்ளார். சற்று பிசகினாலும் அது வெடித்திருக்கும். அது வெடித்திருந்தால் நாங்கள் அனைவரும் புலிச் சந்தேகநபர்கள் என்பதால் அவரை கொலை செய்ய முயன்றோம் என தெரிவித்திருப்பார்கள்.

பதிலுக்கு அவர் சுட்டதால் கலவரம் ஏற்பட்டது என கதை கட்டி திரிபுபடுத்தி கூறியிருப்பார்கள் என கைதிகள் எங்களிடம் தெரிவித்துள்ளனர்,

இராஜாங்க அமைச்சர் மதுபோதையில் துப்பாக்கியுடன் சிறைச்சாலைக்கு சென்று சிறைக் கைதிகளை அச்சுறுத்தியுள்ளமைஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது – என்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி மண்டியிட வைத்த சம்பவம் நாட்டில் அனைத்து தரப்பினர்களிடையேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் குறித்த கைதிகளை பார்வையிடுவதற்காக மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹண பண்டார ஆகியோர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...