jaffna university 5666 scaled
இலங்கைசெய்திகள்

யாழ். பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி மறுப்பு!

Share

யாழ். பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி மறுப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக 35 ஆவது பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கான அனுமதி கோரி முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தனவால் இக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா நிலைமைகளில் முன்னேற்றம் காணப்பட்டால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் 3 நாள்கள் நடத்துவதற்கு அனுமதி கோரி யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரால் கோரிக்கை அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தருக்கு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தனவால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில்,

நாட்டில் தற்போது கொரோனா அபாயம் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய அனைத்து விதமான ஒன்றுகூடல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தங்களின் கோரிக்கைக்கு அனுமதி வழங்க முடியாத நிலையில் உள்ளோம்.

எனினும் நாட்டில் கொரோனா நிலவரம் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் முன்னேற்றம் ஏற்பட்டால் பட்டமளிப்பு விழாவை நேரடியாக நடத்துவது தொடர்பில் பரிசீலிக்கப்படும்.

இருப்பினும் யாழ்.பல்கலைகழக 35 ஆவது பட்டமளிப்பு விழாவை ஒன்லைனில் நடத்தவதற்கு எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...