namal
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனநாயக ஆட்சி மாற்றமே வேண்டும்! – சபையில் நாமல் வலியுறுத்து

Share

” ஜனநாயக வழியிலான ஆட்சி மாற்றமே இடம்பெற வேண்டும். இலங்கையில் இதுவரை அவ்வாறுதான் நடந்துள்ளது. எனவே, அதற்கு அப்பால் செல்வது தவறான முன்னுதாரணமாக அமையும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

” இலங்கை வரலாற்றில் ஜனநாயக ரீதியிலான அரசியல் மாற்றமே இதுவரை இடம்பெற்றுள்ளது. இப்போது ஆட்சியை மாற்ற வேண்டும் என்று மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். இந்த போராட்டங்களின் பின்னணியில் அரசியல் கட்சிகளும் உள்ளன.

கோ ஹோம் கோட்டா என சிலர் கோஷம் எழுப்புகின்றனர். அவர் வீட்டுக்கு சென்றாலும் இப்பிரச்சினை தீராது. நாளை வணிகர்களை விராட்டுவார்கள், ஊரில் உள்ள கிராம சேவகர்களை விரட்டுவார்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களையும் விரட்டுவார்கள். எனவே, ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்ககூடாது.

நாடாளுமன்றத்தில் என்னை விட அரசியல் அனுபவம் வாய்ந்த பலர் இருக்கின்றார்கள். நாம் ஒன்றிணைந்து இப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வழிகளை தேட வேண்டும்.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...