namal
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனநாயக ஆட்சி மாற்றமே வேண்டும்! – சபையில் நாமல் வலியுறுத்து

Share

” ஜனநாயக வழியிலான ஆட்சி மாற்றமே இடம்பெற வேண்டும். இலங்கையில் இதுவரை அவ்வாறுதான் நடந்துள்ளது. எனவே, அதற்கு அப்பால் செல்வது தவறான முன்னுதாரணமாக அமையும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

” இலங்கை வரலாற்றில் ஜனநாயக ரீதியிலான அரசியல் மாற்றமே இதுவரை இடம்பெற்றுள்ளது. இப்போது ஆட்சியை மாற்ற வேண்டும் என்று மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். இந்த போராட்டங்களின் பின்னணியில் அரசியல் கட்சிகளும் உள்ளன.

கோ ஹோம் கோட்டா என சிலர் கோஷம் எழுப்புகின்றனர். அவர் வீட்டுக்கு சென்றாலும் இப்பிரச்சினை தீராது. நாளை வணிகர்களை விராட்டுவார்கள், ஊரில் உள்ள கிராம சேவகர்களை விரட்டுவார்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களையும் விரட்டுவார்கள். எனவே, ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்ககூடாது.

நாடாளுமன்றத்தில் என்னை விட அரசியல் அனுபவம் வாய்ந்த பலர் இருக்கின்றார்கள். நாம் ஒன்றிணைந்து இப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வழிகளை தேட வேண்டும்.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...