செய்திகள்இலங்கை

இந்திய உர இறக்குமதி தாமதம் – விவசாய அமைச்சு

green the soil 2020 06 09
Share

நனோ நைதரசன் திரவ உர இறக்குமதியில் முகவரின் செயற்பாட்டால் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இவ் உரத்தை நாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் நிலவுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தகவல்கள் வெளியிட்ட விவசாய அமைச்சு,

குறித்த முகவரின் செயற்பாடுகள் ஒப்பந்தத்துக்கு முரணாக காணப்படுவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அமைச்சின் உரச் செயலாளர் அலுவலகம் மற்றும் அரச உர நிறுவனம் ஆகியவை நேரடியாக தலையிட்டு முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வார இறுதிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நனோ நைதரசன் திரவ உர இறக்குமதியின் போது கடன் பத்திரத்திற்கான கொடுப்பனவு செலுத்தப்படாமை போன்ற காரணங்களினாலேயே உள்நாட்டு முகவர்களின் செயற்பாடுகள் சிக்கலைத் தோற்றுவித்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...