இந்தியாஇலங்கைசெய்திகள்

தமிழக மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை!

law
Share

யாழ்ப்பாணம் காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களுக்கும் 18 மாத சிறை தண்டனை விதித்து, அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை அவர்களின் இரண்டு படகுகள் மற்றும் மீன் பிடி உபகரணங்கள் என்பன அரச உடமையாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன் பிடி துறை முகத்தில் இருந்து மீன் பிடிக்க புறப்பட்ட 11 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைத்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கடந்த கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை அடுத்து நீதவான் 11 மீனவர்களையும் இன்றைய தினம் வெள்ளிககிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது 11 மீனவர்களுக்கும் 18 மாத சிறைத்தண்டனை விதித்து அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்ததுடன் , அவர்களின் படகுகள் மற்றும் மீன் பிடி உபகரணங்களை அரச உடமையாக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...