21 613ecfe6ac7bf
இலங்கைசெய்திகள்

கடும் கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறக்க முடிவு

Share

எதிர்வரும் முதலாம் திகதி கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, நாட்டை திறப்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ள நிலையில், வாராந்தம் இடம்பெறும் கொவிட் 19 செயலணிக் கூட்டம் நேற்று நடைபெறவில்லை.

கொவிட் –19 ஜனாதிபதி செயலணி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் கூட ஆராய்ந்து முடிவு எடுக்கும். எனினும் இந்த வாரம் கூட்டம் இடம்பெறவில்லை.

இந்நிலையில், நாட்டை திறப்பது தொடர்பிலும் அதன் கட்டுப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு பொறுப்பானவர்களுக்கு ஜனாதிபதி பணித்துள்ளார் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாடு தொடர்ச்சியான மூடப்பட்டிருந்ததன் ஊடாக நல்ல பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ராகம வைத்தியபீடத்தில் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாட்டைத் திறப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி

  • அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 25 சதவீதத்தில் பணியாளர்களை அழைப்பது மட்டுப்படுத்தவேண்டும்.

  • பொதுப் போக்குவரத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது 50 சதவீதமாக இருக்க வேண்டும்

  • திருமண வைபவங்கள் உள்ளிட்ட மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடும் நிகழ்வுகளை முழுமையான தடை செய்தல் வேண்டும்.

  • கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் 70–80 சதவீதங்களுக்கு அண்மித்திருக்க வேண்டும்.

  • போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முடக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரண வீதம் திருப்தியடையும் வகையில் குறைவடைந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...