17 13
இலங்கைசெய்திகள்

இலங்கை கொள்வனவு செய்யவுள்ள கடன் முகாமைத்துவ மென்பொருள் அமைப்பு

Share

இலங்கை கொள்வனவு செய்யவுள்ள கடன் முகாமைத்துவ மென்பொருள் அமைப்பு

பொதுக் கடனை நிர்வகிப்பதற்கான கடன் முகாமைத்துவ மென்பொருள் அமைப்பை (debt management software system) கொள்வனவு செய்ய உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பொதுக் கடன் முகாமைத்துவச் சட்டத்தின்படி, ஒரு பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகம் நிறுவப்பட வேண்டும்.

அத்துடன் இந்த சட்டத்தின் 23வது பிரிவின்படி, பொதுக் கடன் குறித்த சரியான, விரிவான மற்றும் துல்லியமான தரவுகள் மற்றும் தகவல்கள் பொருத்தமான தரவு அமைப்பில் பராமரிக்கப்பட வேண்டும்.

பொதுநலவாய செயலகத்தால் வழங்கப்பட்ட பொதுநலவாய செயலக கடன் பதிவு மற்றும் மேலாண்மை அமைப்பையே தற்போது, இலங்கை அரசாங்கம் வெளிநாட்டுக் கடன் பதிவு மற்றும் கடன் மேலாண்மைக்கு பயன்படுத்துகிறது.

இது வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தால் நிறுவப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

இந்த அமைப்பின் வருடாந்த உரிமத்தின் புதுப்பித்தல் மற்றும் நீடிப்பு தற்போது பொதுநலவாய செயலகத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்தே பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகம் மற்றும் உலக வங்கியின் தொழில்நுட்ப பிரதிநிதிகள் குழுவை நிறுவுவது தொடர்பாக சர்வதேச கண்காணிப்பு நிதியத்துடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதன்படி, பொதுநலவாய செயலகத்திடம் இருந்து பொதுநலவாய மெரிடியன் மென்பொருளை கொள்வனவு செய்வதற்கான பிரேரணைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share
தொடர்புடையது
world 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏர்பஸ் ஊழல் விவகாரம்: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ஷ ஆஜர்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம்...

world 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கண் தானத்திற்குப் பெருகும் ஆதரவு: 84 சதவீத மக்கள் விருப்பம்

இலங்கையில் உள்ள மக்களில் சுமார் 84 சதவீதம் பேர் தமது கண்களைத் தானம் செய்ய விருப்பம்...

world 64
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்: நாமல் ராஜபக்ஷ திட்டவட்டம்

விசாரணை அமைப்புகள் அழைக்கும் போதெல்லாம் தானும் தனது கட்சியும் நேரில் ஆஜராகத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா...

world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிரஜசக்தி தேசிய திட்டம்: 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி

இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான ‘பிரஜசக்தி’ தேசிய திட்டத்தின் கீழ், 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான...