17 13
இலங்கைசெய்திகள்

இலங்கை கொள்வனவு செய்யவுள்ள கடன் முகாமைத்துவ மென்பொருள் அமைப்பு

Share

இலங்கை கொள்வனவு செய்யவுள்ள கடன் முகாமைத்துவ மென்பொருள் அமைப்பு

பொதுக் கடனை நிர்வகிப்பதற்கான கடன் முகாமைத்துவ மென்பொருள் அமைப்பை (debt management software system) கொள்வனவு செய்ய உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பொதுக் கடன் முகாமைத்துவச் சட்டத்தின்படி, ஒரு பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகம் நிறுவப்பட வேண்டும்.

அத்துடன் இந்த சட்டத்தின் 23வது பிரிவின்படி, பொதுக் கடன் குறித்த சரியான, விரிவான மற்றும் துல்லியமான தரவுகள் மற்றும் தகவல்கள் பொருத்தமான தரவு அமைப்பில் பராமரிக்கப்பட வேண்டும்.

பொதுநலவாய செயலகத்தால் வழங்கப்பட்ட பொதுநலவாய செயலக கடன் பதிவு மற்றும் மேலாண்மை அமைப்பையே தற்போது, இலங்கை அரசாங்கம் வெளிநாட்டுக் கடன் பதிவு மற்றும் கடன் மேலாண்மைக்கு பயன்படுத்துகிறது.

இது வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தால் நிறுவப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

இந்த அமைப்பின் வருடாந்த உரிமத்தின் புதுப்பித்தல் மற்றும் நீடிப்பு தற்போது பொதுநலவாய செயலகத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்தே பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகம் மற்றும் உலக வங்கியின் தொழில்நுட்ப பிரதிநிதிகள் குழுவை நிறுவுவது தொடர்பாக சர்வதேச கண்காணிப்பு நிதியத்துடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதன்படி, பொதுநலவாய செயலகத்திடம் இருந்து பொதுநலவாய மெரிடியன் மென்பொருளை கொள்வனவு செய்வதற்கான பிரேரணைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share
தொடர்புடையது
Expired Medical
இலங்கை

பிரபல தனியார் மருந்தகங்களில் இடம்பெற்ற மோசடிகள் அம்பலம்.

நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில் பெருமளவிலான காலாவதியான மற்றும் தரமற்ற மருத்துவ...

arested 2
இலங்கை

காணித்தகராறால் பறிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் உயிர்.

காணித் தகராறு காரணமாக, அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள...

சி.டி.விக்ரமரத்ன
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார் – பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி.

மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன...

Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...