ddd
இலங்கைசெய்திகள்

ஈழத்தின் பிரபல மிருதங்க கலைஞர் மறைவு!

Share

ஈழத்தின் பிரபல மிருதங்க, தபேலா வாத்திய கலைஞர் சதா வேல்மாறன் யாழ்.போதனா மருத்துவமனையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

கொரோனாத் தொற்றின் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் ஒலிப்பதிவாகிய அதிகமான பாடல்கள் மற்றும் பெருமளவான பக்திப் பாடல்கள் ஆகியவற்றுக்கு அவரது அணி இசையமைத்துள்ளது.

யாழ்.மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் இசையரங்குகளையும் ஆலய விழாக்களையும் அலங்கரித்த கலைஞனாக சதா வேல்மாறன் விளங்குகிறார்.

நூற்றுக்கணக்கான மாணவர்களையும் மிருதங்க, தபேலாக் கலைஞர்களையும் உருவாக்கிய பெருமைக்குரிய இவர், பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரால் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டவருமாவார்.

அவரின் திடீர் இழப்பு தொடர்பில் சக கலைஞர்கள் மற்றும் பல்துறை சார்ந்தோர் இவருக்கு அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 3 5
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் கோர மண்சரிவு: 7 பேர் பலி! 82 பேரைக் காணவில்லை – மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

25284407 tn46
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைக்கும் பெர்ன் பனிப்புயல்: 10,000 விமானங்கள் இரத்து – 18 மாநிலங்களில் அவசரநிலை!

அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த...

articles2FWeZuOSJYmiw4RXxNRts3
செய்திகள்இலங்கை

2026 அரச வெசாக் நிகழ்வு மே 30-இல்: மகாநாயக்க தேரர்களின் இணக்கத்துடன் தீர்மானம்!

2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச வெசாக் (State Vesak Festival) நிகழ்வை மே மாதம் 30-ஆம்...

MediaFile 2 5
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி! கட்டுநாயக்கவில் வைத்து சிஐடியினரால் கைது!

சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்குத் தப்பிச் சென்று...