ddd
இலங்கைசெய்திகள்

ஈழத்தின் பிரபல மிருதங்க கலைஞர் மறைவு!

Share

ஈழத்தின் பிரபல மிருதங்க, தபேலா வாத்திய கலைஞர் சதா வேல்மாறன் யாழ்.போதனா மருத்துவமனையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

கொரோனாத் தொற்றின் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் ஒலிப்பதிவாகிய அதிகமான பாடல்கள் மற்றும் பெருமளவான பக்திப் பாடல்கள் ஆகியவற்றுக்கு அவரது அணி இசையமைத்துள்ளது.

யாழ்.மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் இசையரங்குகளையும் ஆலய விழாக்களையும் அலங்கரித்த கலைஞனாக சதா வேல்மாறன் விளங்குகிறார்.

நூற்றுக்கணக்கான மாணவர்களையும் மிருதங்க, தபேலாக் கலைஞர்களையும் உருவாக்கிய பெருமைக்குரிய இவர், பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரால் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டவருமாவார்.

அவரின் திடீர் இழப்பு தொடர்பில் சக கலைஞர்கள் மற்றும் பல்துறை சார்ந்தோர் இவருக்கு அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...