oSSZSXjXSudkwXaCAzV1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நீரில் மூழ்கி உயிரிழப்பு !

Share

நீரில் மூழ்கி உயிரிழப்பு !

பண்டாரகம மஹபெல்லான கடலில் நண்பர்களுடன் நீராடச் சென்ற 16 வயதுடைய மாணவன் நேற்று பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அலுபோமுல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.

அலுபோமுல்ல மகா வித்தியாலயத்தில் பதினோராம் தரத்தில் கல்வி கற்கும் அலுபோமுல்ல மஹிந்த மாவத்தையைச் சேர்ந்த ஜனிதா நிர்மலா என்ற மாணவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவன் தனது பாடசாலையைச் சேர்ந்த மேலும் நான்கு நண்பர்களுடன் இன்று பிற்பகல் 3 மணியளவில் மஹபெல்லான கடலுக்கு வந்து நீராடிக் கொண்டிருந்த போது அவரது மூத்த சகோதரர் மற்றுமொரு நண்பருடன் வந்து கடலில் நீச்சலடித்து நீராடிய போது அவரை பின் தொடர்ந்து சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நீரில் மூழ்கி காணாமல் போன மாணவன் தொடர்பில் அலுபோமுல்ல காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பிரதேசவாசிகளின் உதவியுடன் படகு மூலம் மாணவனை தேடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது நீரில் மூழ்கிய நிலையில் மாணவர் கண்டுபிடிக்கப்பட்டார். மீட்கப்பட்ட மாணவனை வானில் ஏற்றி பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் வைத்தியர்கள் மாணவனின் உயிரைக் காப்பாற்ற முயற்சித்த போதும் மாணவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அலுபோமுல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...