oSSZSXjXSudkwXaCAzV1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நீரில் மூழ்கி உயிரிழப்பு !

Share

நீரில் மூழ்கி உயிரிழப்பு !

பண்டாரகம மஹபெல்லான கடலில் நண்பர்களுடன் நீராடச் சென்ற 16 வயதுடைய மாணவன் நேற்று பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அலுபோமுல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.

அலுபோமுல்ல மகா வித்தியாலயத்தில் பதினோராம் தரத்தில் கல்வி கற்கும் அலுபோமுல்ல மஹிந்த மாவத்தையைச் சேர்ந்த ஜனிதா நிர்மலா என்ற மாணவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவன் தனது பாடசாலையைச் சேர்ந்த மேலும் நான்கு நண்பர்களுடன் இன்று பிற்பகல் 3 மணியளவில் மஹபெல்லான கடலுக்கு வந்து நீராடிக் கொண்டிருந்த போது அவரது மூத்த சகோதரர் மற்றுமொரு நண்பருடன் வந்து கடலில் நீச்சலடித்து நீராடிய போது அவரை பின் தொடர்ந்து சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நீரில் மூழ்கி காணாமல் போன மாணவன் தொடர்பில் அலுபோமுல்ல காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பிரதேசவாசிகளின் உதவியுடன் படகு மூலம் மாணவனை தேடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது நீரில் மூழ்கிய நிலையில் மாணவர் கண்டுபிடிக்கப்பட்டார். மீட்கப்பட்ட மாணவனை வானில் ஏற்றி பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் வைத்தியர்கள் மாணவனின் உயிரைக் காப்பாற்ற முயற்சித்த போதும் மாணவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அலுபோமுல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...