24 663bf9814d8c9
இலங்கைசெய்திகள்

ஹிருணிக்காவுக்கு எதிரான வழக்கு விசாரணை விரைவில்

Share

ஹிருணிக்காவுக்கு எதிரான வழக்கு விசாரணை விரைவில்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்கு (Hirunika Premachandra)எதிரான வழக்கொன்றை விசாரிப்பது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் 2 வார கால அவகாசம் வழங்கியுள்ளது.

ஊவா மாகாண ஆளுநர் மொஹமட் முஸம்மிலின் மகன் தாக்கல் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.

குறித்த நபர் பெண்ணொருவரைத் தாக்கிவிட்டுத் தலைமைறைவாகி இருந்த நிலையில் , அது தொடர்பில் ஹிருணி்க்கா தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக இந்த வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹிருணிக்காவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சட்டத்தரணிகளுக்கு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

Share
தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...