images 2 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

தம்மிக்க இராஜினாமா!!

Share

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான தம்மிக்க பெரேரா, எம்.பி. பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

மொட்டு கட்சியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ச, எம்.பி. பதவியை துறந்த பின்னர் ,அந்த இடத்துக்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார். அவருக்கு அமைச்சு பதவியும் வழங்கப்பட்டது.

அதன் பின்னர், கோட்டா ஆட்சியில் பிரதமராக செயற்பட்ட ரணிலை அவர் கடுமையாக விமர்சித்தார். ரணிலிடமிருந்து நிதி அமைச்சு பதவி பறிக்கப்பட வேண்டும் எனவும் தம்மிக்க பெரேரா வலியுறுத்தினார்.

கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு ஓடிய பின்னர், அமைச்சு பதவியை அவர் துறந்தார். தற்போது ரணில் ஜனாதிபதியாகியுள்ளார். இந்நிலையிலேயே எம்.பி. பதவியை துறக்க திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் இன்னும் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...