tamilni 216 scaled
இலங்கைசெய்திகள்

சைபர் குற்றச் செயல்களை தடுக்க நாடு முழுவதிலும் விசேட பிரிவுகள்

Share

சைபர் குற்றச் செயல்களை தடுக்க நாடு முழுவதிலும் விசேட பிரிவுகள்

இலங்கையில் இடம்பெற்று வரும் சைபர் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் விசேட பிரிவுகள் நிறுவப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முழுவதிலும் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த விசேட புலனாய்வுப் பிரிவு உருவாக்கப்பட உள்ளது.

இவ்வாறு விசேட பிரிவுகளை நிறுவுவது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இணைய வழியில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக வெகுவாக அதிகரித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக வடமேல் மாகாணத்தை உள்ளடக்கும் வகையில் வாரியபொல பகுதியில் முதல் பிரிவு உருவாக்கப்பட உள்ளது.

கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவிற்கு சென்று முறைப்பாடு செய்யாது தங்களது மாகாணத்திலேயே முறைப்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கணனி குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய தூரப் பிரதேசங்களிலிருந்து கொழும்பு செல்வதனை தவிர்த்து அந்தந்தப் பகுதிகளில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...