Untitled 1 Recovered Recovered
இலங்கைசெய்திகள்

கொட்டகலை பிரதேச சபை இ.தொ.கா வசம்

Share

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராஜமணி பிரசாந்த், திறந்த வாக்கெடுப்பு மூலம் பிரதேச சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜேசுதாசன் வியாகுலமேரி சபையின் உப தலைவராக ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொட்டகலை பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது.

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக ராஜமணி பிரசாத், ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக லெட்சுமன் விஷ்வநாதன் ஆகியோர் தலைவருக்காக போட்டியிட்டனர்.

தலைவர் பதவிக்கு இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டதால், திறந்த வாக்கெடுப்பு அல்லது இரகசிய வாக்கெடுப்பு மூலம் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், உறுப்பினர்கள் தனக்கு முன் அழைக்கப்பட்டு, பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தின் அடிப்படையில் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் கூறினார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த லெட்சுமன் விஷ்வநாதன் உட்பட நான்கு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கூட்ட மண்டபத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

சபையில் 12 உறுப்பினர்களும், வலுவான கோரமும் இருந்ததால், பிரதேச சபைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு 10 உறுப்பினர்கள் திறந்த வாக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டதையடுத்து, ஆணையாளர் வெளிப்படையாக வாக்கெடுப்பை நடத்தினார்.

திறந்த வாக்கெடுப்பில், தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ராஜாமணி பிரசாந்த், 10 வாக்குகளைப் பெற்று சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில் இரண்டு சுயாதீன உறுப்பினர்கள் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டனர்.

Share
தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...