Untitled 1 Recovered Recovered
இலங்கைசெய்திகள்

கொட்டகலை பிரதேச சபை இ.தொ.கா வசம்

Share

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராஜமணி பிரசாந்த், திறந்த வாக்கெடுப்பு மூலம் பிரதேச சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜேசுதாசன் வியாகுலமேரி சபையின் உப தலைவராக ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொட்டகலை பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது.

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக ராஜமணி பிரசாத், ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக லெட்சுமன் விஷ்வநாதன் ஆகியோர் தலைவருக்காக போட்டியிட்டனர்.

தலைவர் பதவிக்கு இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டதால், திறந்த வாக்கெடுப்பு அல்லது இரகசிய வாக்கெடுப்பு மூலம் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், உறுப்பினர்கள் தனக்கு முன் அழைக்கப்பட்டு, பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தின் அடிப்படையில் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் கூறினார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த லெட்சுமன் விஷ்வநாதன் உட்பட நான்கு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கூட்ட மண்டபத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

சபையில் 12 உறுப்பினர்களும், வலுவான கோரமும் இருந்ததால், பிரதேச சபைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு 10 உறுப்பினர்கள் திறந்த வாக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டதையடுத்து, ஆணையாளர் வெளிப்படையாக வாக்கெடுப்பை நடத்தினார்.

திறந்த வாக்கெடுப்பில், தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ராஜாமணி பிரசாந்த், 10 வாக்குகளைப் பெற்று சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில் இரண்டு சுயாதீன உறுப்பினர்கள் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...